நூல் வெளியீடு – சொற்களில் சுழலும் பிரபஞ்சம்

கவிஞர் டீன் கபூர் எழுதிய “சொற்களில் சுழலும் பிரபஞ்சம்” கவிதைத் தொகுதியானது எதிர்வரும் 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மருதமுனை பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளது. மறைந்த கவிஞர் ‘ஈழக்குயில் இத்ரீஸ்’ அவர்களை நினைவு கூரும் முகமாக குறித்த நிகழ்வு “கவிஞர் ஈழக் குயில் இத்ரீஸ் அரங்கு” என்ற நாமம் தாங்கி இடம்பெறும். நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். -ஏற்பாட்டுக் குழு